ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் லண்டனில் கைது
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் சமூக ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் கைது செய்யப்பட்டார்.
கிரேட்டா துன்பர்க் கைது
எண்ணெய் மற்றும் எரிவாயு அமைப்புகளின் நிறுவன தலைமை அதிகாரிகள் கூட்டம் பிரித்தானியாவின் லண்டனில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஏதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் கலந்து கொண்டார்.
மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக கிரேட்டா துன்பர்க் முழக்கங்களை எழுப்பும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேட்டா துன்பர்க் இதற்கு முன்னதாக தனது சொந்த நாடான ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |