மருத்துவமனைகளில் விந்தணுக்கள் பற்றாக்குறை: நன்கொடையாளர்களை தேடிவரும் பிரபல நாடு!
ஸ்வீடன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா காலகட்டத்தில் விந்தணு தானம் செய்பவர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதை தவிர்த்து வருவதால், Assisted Pregnancy-க்கு தேவையான சேமிப்பு விந்தணுக்களில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு முழுவதும் மிகக் குறைந்த அளவிலான நன்கொடையாளர்கள் மட்டுமே தானம் செய்துள்ளதாகவும், அதனால் மருத்துவமனைகள் விந்தணு பற்றாக்குறையை சந்துள்ளதாக Gothenburg's பல்கலைக்கழக மருத்துவமனையின் இனப்பெருக்கம் பிரிவின் தலைவர் Ann Thurin Kjellberg கூறியுள்ளார்.
இதனால் Assisted Pregnancy-ஐ நம்பி இருக்கும் தம்பதிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதமூலம் கர்ப்பம் தரிக்க 6 மாதங்கள் காத்திருந்த பெண்கள், தற்போது 30 மாதங்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் கூறுகிறார்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் Assisted Pregnancy சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 12,000 டொலர் செலவாகும், இது பலருக்கு கட்டுப்படியாகாது.
ஆனால், ஸ்வீடனின் தேசிய சுகாதார சேவை மருத்துவமனைகளில் Assisted Pregnancy சிகிச்சை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனில் இதுபோன்ற மிகப்பெரிய கிளினிக், ஸ்கேன் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் இனப்பெருக்கம் பிரிவை நடத்தி வரும் மார்கரெட்டா கிட்லின்ஸ்கி, பல சோதனைகள் காரணமாக ஒரு நன்கொடையாளரை செயலாக்க சுமார் 8 மாதங்கள் ஆகும் என்றும், பொதுவான சிக்கல்கள் காரணமாக பல மாதிரிகள் சாத்தியமான நன்கொடைகளாக மாறத் தவறிவிட்டதாகவும் கூறினார்.
50 ஆண்களில் பாதி பேர் மட்டுமே நன்கொடையாளர்களாக இருக்க முடியும் என்று கிட்லின்ஸ்கி கூறினார்.
சில ஸ்வீடிஷ் பிராந்தியங்கள் சாத்தியமான ஆண் நன்கொடையாளர்களை ஊக்குவிக்க சமூக ஊடகங்களில் பொதுவாக அழைப்பு விடுத்துள்ளன. இருப்பினும் இதற்கிடையில், பற்றாக்குறை நீடிக்கிறது.
இந்நிலையில், தொலைக்காட்சிகளிலும் ஸ்வீடிஷ் ஆண்களை விந்தணு தானம் செய்ய முன்வரச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக Ann Thurin Kjellberg கூறியுள்ளார்.