அதிகாரிகளை சிறை பிடித்து, Pizza கேட்ட கைதிகள்!
சுவீடன் சிறைச்சாலை ஒன்றில், இரு கைதிகள், பாதுகாவல் அதிகாரிகளை சிறைபிடித்து, அவர்களை விடுவிக்கப் 'பீட்ஸா' கேட்டு கோரிக்கை வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 24 வயது ஹானெட் மஹமத் அப்துல்லாஹி (Haned Mahamed Abdullahi) மற்றும் 30 வயது ஐசக் டியுவிட் (Isak Dewit) ஆகிய கைதிகள் இருவரும் கொலைக் குற்றவாளிகள் ஆவர்.
சுவீடன் நாட்டில், எஸ்கில்ஸ்டூனா (Eskilstuna) நகரிலுள்ள சிறைச்சாலையையில் தணடனையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் நேற்று பிற்பகல் நேரத்தில் பாதுகாவல் அதிகாரிகளுக்கான இடத்துக்குள் எப்படியோ நுழைந்தனர். அங்கு இருந்த இரு அதிகாரிகளை அவர்கள் ஒரு அறைக்குள் பிணை பிடித்தனர். கைதிகளின் கையில் ரேசர் பிளேடுகள் இருந்தன.
இதனால், அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிரைச்சிலையைச் சுற்றி உடனடியாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், பொலிஸ் ஹெலிகாப்டர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் அவரச சேவைகளையும் நிறுத்தினர். 9 மணிநேரமாகசிறைப்பிடிக்கப்பட்டனர்.
ஆனால், அங்கு அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை. ஆளுக்கு ஒரு pizza கொடுத்து காவலர்கள் மீட்கப்பட்டனர்.
ஆம், அதிகாரிகளை விடுவிக்க அந்த இரு கைதிகளும் கேட்டது பணமோ நகையோ அல்ல., 20 பீட்ஸாக்கள்- மற்ற கைதிகளுக்கு சேர்த்து.
அதோடு, தப்பிச் செல்ல, அவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றையும் கேட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பீட்ஸாக்கள் அவர்களைச் சென்றடைந்தது. அவர்களும் அதிகாரிகளை விடுவித்தனர். பிணை பிடிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான காயங்களும் இல்லை.
இந்நிலையில், இரு கைதிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.