தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
Swine flu rises in tamilnadu: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், தொடர் சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, கடுமையான தலைவலி, மூட்டு வலி, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்செலுத்தும் சுய மருத்துவத்தைத் (Self-medication) கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |