இங்கிலாந்துக்கு எதிராக 189 ஓட்டங்கள் குவிப்பு! தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு நுழைய இன்னும் என்ன தேவை?
டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஒட்டிடங்கள் எடுத்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்றுவரும், டி20 உலகக் கோப்பையின் இன்றைய (சனிக்கிழமை) 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, முதலில் துடுப்பாட தென் ஆப்பிரிக்காவிலிருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.
ஹென்ட்ரிக்ஸ் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் மொயீன் அலி சுழலில் போல்டானார். இதையடுத்து, டி காக் மற்றும் ராசி வான்டர் டூசன் கூட்டணியி அமைத்தனர்.
இந்த இணை படிப்படியாக எண்ணிக்கையை உயர்த்தி பின்னர் ரன் ரேட்டையும் ஓவருக்கு 7-ஐ தாண்டி உயர்த்தினர். டி காக் 34 ஓட்டங்கள் எடுத்து அடில் ரஷித் சுழலில் சிக்கி வெளியேறினார்.
விக்கெட் விழுந்தாலும், டூசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 37-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். எய்டன் மார்கிரமும் அதிரடி காட்ட அணியின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. மார்கிரம் கடைசி ஓவரில் தனது 24-வது பந்தில் அரைசதம் அடித்தார்.
கிறிஸ் ஜோர்டன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் பறக்க தென் ஆப்பிரிக்காவுக்கு 16 ஓட்டங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூசன் 60 பந்துகளில் 94 ஓட்டங்களும், மார்கிரம் 25 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி துடுப்பாட களமிறங்கியுள்ளது. இதில் 85 ஓட்டங்களுக்கு மேல் அடித்ததாலே இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெரும்.
அதேபோல் இங்கிலாந்து அணி 131 ஓட்டங்களுக்கு குறைவாகி அடித்தால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.