டி20 உலககோப்பையை இந்தியா இழக்க முக்கிய காரணம் இதுவா? - உண்மையை சொன்ன ஹர்திக் பாண்ட்யா
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக்கோப்பையில் இந்தியா லீக் சுற்றோடு வெளியேறியதற்கு தேர்வுக்குழுதான் முக்கிய காரணம் என அதிர்ச்சியாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. அந்த அணியில் காயம் காரணமாக இந்திய அணியின் வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டதில் இருந்து பந்துவீச முடியாமல் தவித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பந்து வீசவில்லை.
இதனிடையே உலக்கோப்பைக்கான அணியின் பாண்ட்யாவின் பெயரும் இடம் பெற்றது. இது பலர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா விளக்கம் ஒன்றை அளித்தார்.
அதில் டி20 உலகக் கோப்பையின்போது ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் பந்துவீசுவார். அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என கூற, அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பந்துவீசி 2 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதராக ஒருசில ஓவர்களை மட்டுமே வீசினார். பாகிஸ்தானுக்கு எதிராக பந்து வீசவில்லை.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், டி20 உலகக் கோப்பையின்போது தான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சேர்க்கப்பட்டதாகவும், முதல் போட்டியில் பந்துவீச கடுமையாக பயிற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் பந்துவீசினேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பையில் சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழு ஹார்திக் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சேர்த்துள்ளது. ஆனால் சேத்தன் ஷர்மா அனைவரையும் நம்ப வைத்து மோசம் செய்ததாக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.