நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் மகன்... சீனாவை மொத்தமாக கோபத்தில் தள்ளிய தைவானின் புதிய ஜனாதிபதி
மிக ஆபத்தான பிரிவினைவாதியென சீனாவால் முத்திரைக் குத்தப்பட்ட நபர், தைவானின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்
சீனாவின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தைவானின் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. புதிய ஜனாதிபதியாக ஹார்வார்டு பட்டதாரியான Lai Ching-te தெரிவாகியுள்ளார்.
@reuters
எதிர்வரும் மே மாதம் Lai Ching-te தைவானின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கிறார். வில்லியம் என பரவலாக அறியப்படும் Lai Ching-te ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது மீண்டும் மீண்டும் சீனாவுடன் இருக்கும் தற்போதைய நிலையைத் தொடர விரும்புவதாகவே வலியுறுத்தி வந்துள்ளார்.
அதாவது தைவான் எப்போதும் போல தனித்து செயல்படும், இருப்பினும் சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் நாங்கள் எதிரிகளாக மாற விரும்பவில்லை. நாம் நண்பர்களாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Lai Ching-te.
@reuters
ஆனால் சீனாவை பொறுத்தமட்டில் 64 வயதான Lai Ching-te ஒரு ஆபத்தான பிரிவினைவாதி, பிரச்சனைகளை தூண்டுபவர். 2017ல் அவரது செயல்பாடுகள் சீன பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தண்டிக்க வேண்டும் என்றும் சீனாவில் பரவலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
தந்தை நிலக்கரி சுரங்கத் தொழிலாளி
சீனாவின் கோபத்தை மீறி, தைவான் ஒரு சுதந்திர நாடு என்றே Lai Ching-te தற்போதும் கூறி வருகிறார். மேலும், தைவானை ஒரு குடியரசாக Lai Ching-te பிரகடனம் செய்ய வாய்ப்பிருப்பதாக சீனா அஞ்சுகிறது,
@reuters
ஆனால் அப்படி ஒரு முடிவை தாம் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை என்றே Lai Ching-te கூறியுள்ளார். தைவானின் சுதந்திரத்திற்காக Lai Ching-te நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக கூறும் நிபுணர்கள், இதனால் சிக்கல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தைவானின் வடக்குப்பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் Lai Ching-te. இவரது தந்தை நிலக்கரி சுரங்கத் தொழிலாளி. Lai Ching-te குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தவர்.
@reuters
பின்னர் மருத்துவராக பட்டம் பெற்ற Lai Ching-te, முதுகுத்தண்டு தொடர்பான சிகிச்சையில் சிறப்பு பயிற்சி பெற்றார். அரசியலில் களமிறங்கிய Lai Ching-te, கடந்த 2020ல் நாட்டின் துணை ஜனாதிபதியானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |