சீனாவுக்கு ஒடுங்கி போகமாட்டோம்! பதில் தாக்குதல் நடத்துவோம்: பகிரங்கமாக எச்சரிக்கும் பிரபல நாடு
சீனாவுக்கு நாங்கள் அடி பணியமாட்டோம், அதே சமயம் யுத்தம் செய்ய விரும்பவில்லை என்று தைவான் எச்சரித்துள்ளது.
சீனாவில் கடந்த 1949-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின், தைவான் உருவானது. இருப்பினும் சீனா தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி, தேவைப்பட்டால், தைவானைக் கைப்பற்றுவதற்கு படை பலத்தை கூட பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீனா கூறி வருகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக, தைவானைச் சுற்றி, சீனா தன்னுடைய போர் பயிற்சியை செய்து வருகிறது.
ஆனால், தற்போது அந்த போர் பயிற்சி அதிகரித்துள்ளது. தன்னுடைய தென் கிழக்கு பிராந்தியத்தில் சீனா தனது பழைய டிஎப்-11, டிஎப்-15 ரக ஏவுகணைகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக மிக நவீன ஹைப்பர் சானிக் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது.
மேலும், புஜியான், குவாங்டாங் மாகாணங்களில் கடற்படை தளங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களை சீனா விரிவுபடுத்தியுள்ளது. இம்மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு ஏவுகணை தளமும் முழு அளவில் ஆயுதங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைவான் ஜலசந்தியில் சீனாவின் செயல்பாடுகள் எங்களைத் தூண்டுவது போல் உள்ளது.
இருப்பினும் சீனாவுடன் நாங்கள் எந்தவித ஆயுதப் போரிலும் ஈடுபட மாட்டோம். அமைதியான வழியில் தீர்வுகளையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், சீன கம்யூனிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சிவிட மாட்டோம்.
அதன் அழுத்தத்துக்கு பயந்து ஒடுங்கிப் போகமாட்டோம். சீன விமானங்கள், கப்பல்களை நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருவேளை சீனா தாக்குதல் நடத்தினால் அதையும் ஒரு சுதந்திர நாடாக நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளது.