ஆப்கானிஸ்தான் சிறுமிகள் தொடர்பில் தாலிபான்கள் உறுதியளிப்பு
ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் விரைவில் மேல்நிலைக் கல்வி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் உறுதியளித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் யுனிசெஃப் துணைத் தலைவர் ஓமர் அப்தி தெரிவிக்கையில், கடந்த வாரம் காபூலுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தாலிபான்களுடனான சந்திப்பில், ஆப்கானிஸ்தான் சிறுமிகள் விரைவில் மேல்நிலைக் கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தமக்கு உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி இது தொடர்பில் ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர் என்றார். தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்னர் 27வது நாளாக ஆப்கானிஸ்தானில் சிறுமிகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் துரிதமாக செயல்பட்டு நிலைமையைச் சரிசெய்ய வேண்டுமெனத் தாலிபான்களிடம் வலியுறுத்தியதாகவும் ஓமர் அப்தி தெரிவித்துள்ளார்.
1996-2001 வரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது, அவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்தனர் மற்றும் அவர்கள் வேலை மற்றும் பொது வாழ்க்கைக்கும் தடை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.