தாலிபான்களின் அடுத்த திட்டம்! விரைவில் ஆப்கான் மக்களுக்கு புது பாஸ்போர்ட்: வெளியான முக்கிய தகவல்
ஆப்கானில் வசிக்கும் மக்களுக்கு புது கடவுசீட்டு மற்றும் புது அடையாள அட்டை வழங்கப்படும் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானில் ஆட்சி அமைத்த தாலிபான்கள் அவ்வப்போது புது புது கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மக்கள் பயங்கரவாதிகளின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பித்து செல்கின்றனர்.
அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் புதிய கடவுசீட்டுகள் வழங்கப்படும் என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அடையாளர் அட்டைகளும், கடவுசீட்டுகளும் தற்காலிகமாக மட்டுமே செல்லுபடியாகும்.
புதிய கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு கட்டாயமாக மக்கள் அவற்றை தான் பயன்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக தாலிபான்கள் கூறியுள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் அனைவருக்கும் புதிய கடவுசீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என்றும் அவற்றில் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் என்ற பெயர் இருக்கும் என்று ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் கலாசாரத் துறை துணை அமைச்சர் ஜபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.