அமெரிக்க இராணுவ சிறையில் இருந்தவரை பாதுகாப்பு அமைச்சராக்கிய தாலிபான்
அமெரிக்காவின் குவாண்டனமோ இராணுவ சிறையில் இருந்தவரை தாலிபான்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய துருப்புகள் ஆகஸ்டு 31ம் திகதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தாலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில், அதன் பின்னரே புதிய ஆட்சி அமையும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய நிதி அமைச்சர், உளவுத்துறை தலைவர் மற்றும் உள்விவகார அமைச்சர் உள்ளிட்டோரை தாலிபான்கள் நியமித்துள்ளனர்.
Gul Agha என்பவர் நிதியமைச்சராகவும் Sadr Ibrahim என்பவர் செயல் உள்விவகார அமைச்சராகவும் Najibullah உளவுத்துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முல்லா ஷிரின் காபூல் ஆளுநராகவும், ஹம்துல்லா நோமானி தலைநகரின் மேயராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் குவாண்டனமோ இராணுவ சிறையில் இருந்து மீண்ட Abdul Qayyum Zakir என்பவரை தாலிபான் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருப்பார் என அறிவித்துள்ளனர்.