ஆப்கானிஸ்தானில் பணத்துக்காக 130 பெண்களை விற்ற நபரை கைது செய்த தாலிபான்கள்! அவருக்கு ஏற்படவுள்ள கதி
ஆப்கானிஸ்தானில் 130 பெண்களை ஏமாற்றி பணத்துக்கு விற்ற நபரை தாலிபான் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு Jawzian மாகாணத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தாலிபான் மாகாண காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மோசடி நபர் ஏழை பெண்களையே குறிவைத்துள்ளார். அவர்களிடம் சென்று உங்களை பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்து சென்று அடிமையாக விற்றிருக்கிறார்.
அந்த பெண்களும் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகளை மேம்படுத்தி கொள்ள ஆசைப்பட்டு ஏமாந்துள்ளனர்.
இப்படி 130 பெண்களை அவர் கடத்தி சென்று விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபருக்கு கொடூரமான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, எனெனில் தாலிபான்களின் வரலாறு அவ்வாறே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.