காபூலில் தொடரும் தலிபான்கள் காட்டுமிராண்டித்தனம்.. ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட நபர்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தொடரும் தலிபான்களின் காட்டுமிராண்டித்தனத்தை நகரவாசி ஒருவர் ரகிசயமாக வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை கைப்பற்றிய தலிபான்கள் எஞ்சியிருந்த பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றிவிட்டதாக சமீபத்தில் அறிவித்தனர்.
ஆனால், தலிபான்களின் அறிவிப்பை மறுத்து எதிர்ப்பு படை தலைவர் அகமத் மசூத் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான் மற்றும் எதிர்ப்படையினருக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாழ்ந்து வரும் பஞ்ச்ஷீர் மக்களை தலிபான்கள் காட்டுமிராண்டித்தனமாக கைது செய்து வரும் வீடியோ காட்சிக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் நகரவாசி ஒருவர் குறித்த சம்பவத்தை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
🚨Disturbing!
— Aisha Ahmad (@AishaTaIks) September 13, 2021
Handcuffed from back #Taliban are arresting the people of Panjshir all around #Kabul cruelly like this, and the world is silent!#NoToTaliban #DoNotRecognizeTaliban #Afghanistan#Kabul pic.twitter.com/aCkGbmX5T3
குறித்து வீடியோவில், காபூல் தெருக்களில் ஆயுதங்களுடன் குவிந்த தலிபான்கள், பஞ்ச்ஷீர் மக்களை பிடித்து கைகளை பின்னால் வைத்து விலங்கு போட்டு, ஒரு கார் டிக்கியில் இரண்டு பேரை உள்ளே தள்ளி பூட்டி அழைத்துச்செல்கின்றனர்.