ஆப்கானிஸ்தானில் மரம் வெட்ட தடை! தலிபான் முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் மரம் வெட்டுதல் மற்றும் மர வர்த்தகத்திற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
தலிபானின் புதிய இடைக்கால அரசாங்க அமைச்சர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
காடுகளை வெட்டுவது, மரங்களை விற்பனை செய்வது மற்றும் கொண்டு செல்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மாகாண அதிகாரிகள் அதைத் தடுக்க வேண்டும் என்று Zabihullah Mujahid ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பில் காடுகள் 5% மட்டுமே உள்ளன.
நாட்டின் கிழக்கில் உள்ள மலைகளான இந்து குஷ் பகுதியில் பெரும்பாலான காடுகள் அமைந்துள்ளன மற்றும் உள்ளூர் பழங்குடி மக்களால் இந்த காடுகள் பாதுகாக்கப்படுகின்றன.
தலிபானின் இந்த நடவடிக்கை கிழக்கு ஆப்கானிஸ்தானில் பழங்குடியினரிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.