பொது இடத்தில் மரணதண்டனை நிறைவேற்ற.. சடலங்களை தொங்கவிட தடை! தலிபான் அரசு உத்தரவு
முல்லா ஹசன் அகுந்த் தலைமையிலான தலிபான் இடைக்கால அரசு உள்ளூர் அதிகாரிகளுக்கு பொது இடத்தில் மரணதண்டனை நிறைவேற்ற மற்றும் 'சடலங்களை தொங்கவிடுவதை' தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது.
தலிபான் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்கள் கவுன்சில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்றி ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் மரணதண்டனை நிறைவேற்ற மற்றும் உடல்களை தூக்கில் தொங்கவிடுவதை தவிர்க்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தலிபானின் புதிய இடைக்கால அரசாங்க அமைச்சர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நேற்று ஆப்கானிஸ்தானில் மரம் வெட்டுதல் மற்றும் மர வர்த்தகத்திற்கு தலிபான் இடைக்கால அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
தலிபானின் இந்த நடவடிக்கை ஆப்கானியர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.