தலை துண்டித்து, நாக்கை அறுத்து துடி துடிக்க கொலை செய்த தாலிபான்கள்! கொடூரத்தின் உச்சம்
ஆப்கானிஸ்தானில் வாலிபால் குழுவைச் சேர்ந்த வீராங்கனை தலை துண்டிக்கப்பட்டு தாலிபான்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு, அங்கு பல நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை, அரசியல், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கன் தேசிய பெண்கள் வாலிபால் குழுவைச் சேர்ந்த Mahjubin Hakimi என்ற பெண் வீராங்கனை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வாலிபால் குழு பயிற்சியாளர் Suraya Afzali,ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தேசிய பெண்கள் வாலிபால் குழுவைச் சேர்ந்த Mahjubin Hakimi-ஐ, தலிபான்களால் தலை துண்டித்தும், நாக்கை அறுத்தும் துடி துடிக்க கொலை செய்தனர்.
இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று அவரின் பெற்றோரை அவர்கள் மிரட்டினர். அதன் பின் சில நாட்கள் கழித்து அவர் தலை துண்டிக்கப்பட்ட படத்தை தாலிபான்கள் வெளியிட்டனர் என்று கூறியுள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன் அங்கிருந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரங்கானைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற முயற்ச்சி செய்தனர். ஆனால் இரண்டு பேர் மட்டுமே வெளியேற முடிந்தது குறிப்பிடத்தக்கது.