சுட்டு வீழ்த்தப்பட்ட இராணுவ ஹெலிகாப்டர்.. பலர் மரணம்! ஆப்கானில் தொடரும் தலிபான் அட்டூழியம்
ஆப்கானிஸ்தான் இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியாக தலிபான் செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid தெரிவித்துள்ளார்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள Nad-e-Ali மாவட்டத்தின் மையத்திற்கு அருகில் ஆப்கானிய இராணுவ ஹெலிகாப்டர் தலிபான் போராளிகளால் சுட்டு வீழத்தப்பட்டது.
நாங்கள் (தலிபான்) Nad-e-Ali மாவட்டத்தையும் ஆக்கிரமித்து அதன் காவல்துறைத் தலைவரை சிறை பிடித்துள்ளோம் என்று Mujahid ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் பல ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறால் இராணுவ ஹெலிகாப்டர் ஹெல்மண்ட் மாகாணத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியதாக இராணுவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி Pajhwok ஆப்கான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிய இராணுவம் வெளியிட்ட தகவலின் படி, இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் ஹெலிகாப்டர் சேதடைந்ததாக தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் சர்வதேச படைகள் நாட்டிலிருந்து விலகத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆப்கானில் தலிபான் தனது தாக்குதலை முடுக்கிவிட்ட நிலையில், சமீபத்திய வாரங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தோஹாவில் தலிபானும் அமெரிக்காவும் அடைந்த ஒப்பந்தத்தின் ஒரு அம்சமாக படைகள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.