அடங்காத தாலிபான்கள்! ஆப்கானில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை.. வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தொடர்ந்து தாலிபான்கள் பல கொடுமைகளை நிகழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசம் சென்றதில் இருந்து நாடே பதற்றமான நிலையில் காணப்படுகிறது. இதனால் மக்கள் உயிர்வாழ பயந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் வசிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தாலிபான்கள் தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அல் அரேபியா வெளியிட்ட செய்தியில், ஆப்கானில் உள்ள பத்திரிக்கையாளர்கள், தாலிபான்கள் மேல் பயங்கர பயத்தில் உள்ளனர்.
20 வருடங்களாக கட்டி காக்கப்பட்ட அனைத்தும் நாசமாகி விட்டது. மேலும் மேலும் பத்திரிகையாளர்களிடமிருந்து கேமரா மற்றும் பல உபகரணங்கள் தலிபான்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் துபான் ஓமர் என்ற பத்திரிகையாளர் தலிபான்களால் கொல்லப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் தாலிபான்களுக்கு எதிராக போராட்டங்களை பதிவு செய்யவும் பத்திரிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தப்பி தவறி போராட்டம் நடத்தும் பெண்களையும் சுட்டு தள்ளுவதாக தெரிவித்துள்ளார்.