ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நான்கு பேரின் கைகளை துண்டித்த தாலிபான் அரசு!
ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரின் கைகள் மக்கள் முன்னிலையில் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது.
தாலிபான் ஆட்சி
கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டது.
அதேபோல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தாலிபான் அரசு சமீபத்தில் அறிவித்தது. அதாவது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு கசையடி, கை, கால்கள் வெட்டுதல், மரணம் என்றும் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மக்கள் முன்னிலையில் கைகள் துண்டிப்பு
இந்த நிலையில், காந்தஹாரில் உள்ள ஷாஹி மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நான்கு பேரின் கைகள் துண்டிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் இந்த தண்டனை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Taliban have reportedly cut off the hands of 4 people in a football stadium in Kandahar today, accused of theft, in front of spectators.
— Shabnam Nasimi (@NasimiShabnam) January 17, 2023
People are being lashed, amputated & executed in Afghanistan, without fair trial and due process.
This is a human rights violation. pic.twitter.com/vLcjCOTOM5
இதேபோல் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக 9 பேருக்கு கசையடி கொடுக்கப்பட்டதாக ஆளுநர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுபோன்ற தண்டனைகள் பல்வேறு நபர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் தாலிபான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், ஆளும் ஆப்கான் அரசு அதனை கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது.