வெற்றி பெற்றதாக தாலிபான்கள் அறிவிப்பு! ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போராடும் மக்கள்..
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து ஒரு உரையின் மூலம் தாங்கள் வெற்றி பெற்றதாக ஒரு மூத்த தலிபான் அதிகாரி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தார்.
இந்தநிலையில், ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.
தாலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை காபூல் நகருக்குள் நுழைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி Ashraf Ghani நாட்டை விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து, தாலிபான் படையினரின் வெற்றியை அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு உள்ளேயே சென்று தற்போது அதிரகாரப்பூர்வாமாக வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
அதில், காபூலின் தலைநகரைக் கைப்பற்றி ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றுவது என்பது 'நிகரற்ற சாதனை' என்று தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா பரதர் கூறியுள்ளார்.
Mullah Baradar to Taliban: “we have reached a victory that wasn’t expected…we should show humility in front of Allah…now it’s time of test — now it’s about how we serve and secure our people, and ensure their future/good life to best of ability”
— Mujib Mashal (@MujMash) August 15, 2021
pic.twitter.com/EP6R8B5dot
ஆப்கானில் இனி மக்கள் கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் மத்தியில், தாலிபான்கள் ஒரு 'திறந்த, உள்ளடக்கிய இஸ்லாமிய அரசாங்கத்தை' அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
தாலிபான்கள் 'அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவோம்' என்று உறுதியளித்த போதிலும், விமான நிலையத்தின் பகுதியில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. அங்கே நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

