ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமுல்படுத்தவிருக்கும் அரசியலமைப்பு இது தான்! வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் அமுல்படுத்தவிருக்குமு் அரசியலமைப்பு சட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, காபூல் உட்பட பெரும்பாலான மாகாணங்களை தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
ஆக்ஸ்ட் 31ம் திகதி நாட்டை விட்டு வெளிநாட்டு படைகள் வெளியேறிய சில நாட்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசாங்கத்தை தலிபான்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னர் முகமது ஜாஹிர் ஷாவின் ஆட்சி காலத்தில் நாட்டில் அமுலில் இருந்த அரசியலமைப்பை தலிபான்கள் தற்காலிகமாக அமுல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷரியாவுக்கு எதிரான சட்டங்களை தவிர்த்து, மன்னர் ஜாஹிர் ஷா கால அரசியலமைப்பு தற்காலிகமாக அமல்படுத்தப்படும் என Al-Jazeera-வுக்கு அளித்த பேட்டியின் போது தலிபான் நீதித்துறை அமைச்சர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னரான முகமது ஜாஹிர் ஷா 1933-1973 வரை என சுமார் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.