ஆப்கானிஸ்தானில் தொடரும் தாக்குதல்... கொல்லப்படும் தலிபான்கள்! வெளி வரும் முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தலிபான் போராளிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக ஐஎஸ்-கே முக்கிய தளமாக இருக்கும் Nangarhar மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக Nangarhar மாகாணத்தில் தலிபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கே பொறுப்பேற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று ஜலாலாபாத்தில் உள்ள சோதனை சாவடியில் ஆயுதமேந்திய நபர் ஒருவர், தலிபான்களை குறிவைத்து சரமாரி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில், இரண்டு தலிபான்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆனால், இந்த தாக்குதலை உறுதி செய்த தலிபான் வட்டாரம், கொல்லப்பட்ட 3 பேரும் பொதுமக்கள் என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி அப்பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாகவும், மேலும், கொல்லப்பட்ட தலிபான்களிடமிருந்த ஆயுதங்களை தாக்குதல்தாரிகள் எடுத்துச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை ஜலாலாபாத்தில் தாலிபான் வாகனங்களை குறிவைத்து மூன்று தனித்தனி வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை தாலிபான் வாகனம் மீது மற்றொரு "வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் 35க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர் என Amaaq News Agency தெரிவித்துள்ளது.