பாகிஸ்தான் பாடசாலையில் ஏற்றப்பட்ட தலிபான் கொடி.. அகற்ற குவிந்த பொலிஸை துப்பாக்கியுடன் மிரட்டி விட்ட மதகுரு! வைரலாகும் வீடியோ
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதக் கல்வியை பயிற்றுவிக்கும் பாடசாலையில் ஏற்றப்பட்ட தலிபான் கொடிகளை அகற்ற வந்த பொலிஸ் அதிகாரிகளை மதகுரு மிரட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாடசாலையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
கொடியை அகற்ற வந்த பொலிஸ் அதிகாரிகளை Lal Masjid பள்ளிவாசலின் மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் மிரட்டியுள்ளார்.
Lal Masjid பள்ளிவாசலுக்கு அருகே உள்ள பாடசாலை கட்டிடத்தின் மேல் தலிபான் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதை அறிந்த பாகிஸ்தான் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
Scenes outside Jamia Hafsa in Islamabad after policemen arrived at the seminary to remove Afghan Taliban's flag from its rooftop. Red Mosque's Maulana Abdul Aziz can be seen carrying a weapon pic.twitter.com/jkJ8XH5R1v
— Roohan Ahmed (@Roohan_Ahmed) September 18, 2021
ஆனால், தலிபான் கொடியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த Lal Masjid பள்ளிவாசலின் மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ், பொலிஸ் அதிகாரிகளை பொதுவெளியில் வைத்து மிரட்டியுள்ளார்.
குறித்த வீடியோவில், ஆப்கானிஸ்தானுடனான போரின் போது பாகிஸ்தான் தலைவர்கள், இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ தலிபான்களை ஆதரித்த போது, ஏன் பாடசாலை மேல் பறக்கும் தலிபான் கொடிகளை பாகிஸ்தான் பொலிஸ் அகற்ற வேண்டும் என அஜீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள் என மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் பொலிஸை எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் பொலிஸ் அதிகாரிகளை எச்சரிக்க, அவருக்கு பின்னால் ஆயுதமேந்திய நபர்கள் நிற்கின்றனர்.
அதேசமயம், பள்ளிவாசலுக்கு வெளியே மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
பாடசாலை மேல் ஏற்றப்பட்டுள்ள தலிபான் கொடியை அகற்ற மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ் உடன் மாணவர்களும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் பொலிசார் கொடியை அகற்றாமல் அங்கிருந்து திரும்பியுதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதகுரு மௌலானா அப்துல் அஜீஸ், தலிபான் மற்றும் ஷரியா சட்ட ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.