ஆப்கானில் கட்டுக் கட்டாக பணத்தை அள்ளும் தாலிபான்கள்! அது யார் வீட்டில் இருந்தது தெரியுமா? வெளியான வீடியோ
ஆப்கானிஸ்தானில் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணத்தை தாலிபான்கள் சூட்கேஸில் அடைத்து வைத்து கொண்டு செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 15-ஆம் திகதி ஆப்கானிஸ்தானைக் தாலிபான்கள் கைப்பற்றியதால், அந்நாட்டின் ஜனாதிபதி Ashraf Ghani உடனடியாக நாட்டை விட்டு தப்பி ஓடினார். நாட்டை விட்டு ஓடிய போது, அவர் கட்டுக் கட்டாக பணத்தை ஒரு ஹெலிகாப்டர் நிறைய அள்ளிச் சென்றதாக செய்தி வெளியானது.
ஆனால், அதை Ashraf Ghani மறுத்து வருகிறார். இதற்கிடையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு முன்னாள் அரசு ஊழியர்களின் வீட்டிற்குள்ளும் நுழைந்து அதிரடி சோதனையில் இறங்கி வருகின்றனர்.
Taliban say they have found 6.5M US dollars from @AmrullahSaleh2 house when they were searching. pic.twitter.com/3L1ryVWObT
— Tajuden Soroush (@TajudenSoroush) September 13, 2021
அந்த வகையில் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த Amrullah Saleh வீட்டிற்குள் நுழைந்த தாலிபான்கள், அங்கு அவருடைய வீட்டில் இருந்து சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 1,30,12,56,450 கோடி ரூபாய்) பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Ashraf Ghani நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், இப்போது நான் தான் ஜனாதிபதி என்று தாலிபான்களுக்கு எதிராக Amrullah Saleh நின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.