திருடர்களின் கைகளை வெட்டுதல் முதலான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும்: தாலிபான் அமைப்பின் நிறுவனர்
ஆப்கானிஸ்தானில் திருடர்களின் கைகளை வெட்டுதல் முதலான பயங்கர தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் என தாலிபான் அமைப்பின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை தாலிபான்கள் ஆட்சி செய்தபோது, மக்கள் முன்னிலையில், பெரிய விளையாட்டுத் திடல்கள், மசூதிகள் அருகிலுள்ள மைதானங்களில் வைத்து, திருடர்களின் கைகளை வெட்டுதல் முதலான கொடூர தண்டனைகளை தாலிபான்கள் அளித்ததற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தோன்றியது.
இந்நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதே தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் என தாலிபான் அமைப்பின் நிறுவனரான Mullah Nooruddin Turabi என்பவர் தெரிவித்துள்ளார்.
முன்பு தாலிபான்கள் ஆண்டபோது இஸ்லாமிய சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளை செயல்படுத்தியவர் Turabi. மைதானங்களில் வைத்து நாங்கள் கொடுக்கும் தண்டனைகளை மற்ற நாட்டவர்கள் விமர்சித்தார்கள். ஆனால், நாம் அவர்களது தண்டனை முறைகளையோ சட்டங்களையோ விமர்சிக்கவில்லை. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என யாரும் எங்களுக்குக் கூறவேண்டிய அவசியமில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்தொடர்வோம், குரானின்படி எங்கள் சட்டங்களை உருவாக்குவோம் என்றார் Turabi.
தாலிபான்களின் சட்டப்படி, கொலை செய்தவர்கள், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தால் மக்கள் முன்பு தலையில் ஒரே முறை சுடப்பட்டுக் கொல்லப்படுவார்கள். அல்லது கொலை செய்தவனிடமிருந்து இரத்தப் பணம் என்னும் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு அவனை விட்டுவிடுவார்கள்.
திருடர்களின் ஒரு கை வெட்டப்படும். வழிப்பறிக்கொள்ளையர்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கப்படும்.
இப்போது தாலிபான்கள் மீண்டும் ஆப்கனைக் கைப்பற்றியுள்ள நிலையில், முன்பு ஆட்சியில் கொடிய தண்டனைகளை வழங்கிய Turabiக்கு இப்போதும் ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் முன்பு தாலிபான்களால் வழங்கப்பட்ட அதே தண்டனைகள் மீண்டும் தொடரும் என்கிறார். ஆனால், முன்போல் மைதானங்களில் இல்லாமல் தனி இடங்களில் அவை நிறைவேற்றப்படும் என்கிறார் அவர்.
கைகளை வெட்டுதல் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என்று அவர் கூற, ஆப்கன் மக்கள் அதைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று பார்த்தால், தலைநகர் பாதுகாப்பாக மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் சிலர்.
தற்போதைய ஆட்சியில் திருடர்கள் முகத்தில் கரி பூசி அவர்களை தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஒரு வழக்கம் இருக்கிறது. மக்கள் பொது இடங்களில் அவமதிக்கப்படுவதைப் பார்ப்பதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றாலும், அதைப் பார்ப்பவர்கள் இனி திருட யோசிப்பார்கள் என்கிறார் கடை வைத்திருக்கும் ஒருவர்.
தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றும் முன் திருடர்கள் சர்வசாதாரணமாக தெருக்களில் நடமாடியிருக்கிறார்கள். ஆகவே, திருடர்கள் பயம் காரணமாக இருட்டிய பின் மக்கள் நடமாட்டத்தையே தவிர்த்திருக்கிறார்கள்.
இப்போது, தன் கடையை இருட்டிய பிறகும் திறந்து வைத்திருக்க முடிகிறது என்கிறார் மற்றொரு கடைக்காரர்.