பஞ்ச்ஷீரை கைப்பற்ற தலிபான்களுடன் கைகோர்த்த பிரபல நாடு? வெளிவரும் பகீர் தகவல்
ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை கைப்பற்றிய தலிபான்கள் எஞ்சியிருந்த பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை பஞ்ச்ஷீர் மொத்தமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்ததாக தலிபான்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது.
ஆனால், பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை. மறைந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா படை தளபதி அகமத் ஷா மசூத்தின் மகன் அகமத் மசூத் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேஹ் ஆகியோரின் தலைமையிலான தேசிய எதிர்ப்பு படையின் கோட்டையாக பஞ்ச்ஷீர் இருந்தது.
தலிபான்களுக்கும் எதிர்ப்பு படையினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து பஞ்ச்ஷீரில் இரு தரப்பினருக்கும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணமும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பஞ்ச்ஷீர் ஆளுநர் இல்லத்தில் தலிபான் கொடியை போராளிகள் ஏற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
JUST IN ? Taliban hoisted flag at Panjshir Governor House after taking control of the last province that was under rule of anti-Taliban forces in Afghanistan
— Insider Paper (@TheInsiderPaper) September 6, 2021
pic.twitter.com/U4LJ6zGTUu
பாகிஸ்தா்ன விமானப்படை உதவியுடன் தலிபான்கள் பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.