தொடரும் வன்முறை! 13 பேரை கொடூரமாக சுட்டு கொலை செய்த தாலிபான்கள்.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசு படை வீரர்கள் உட்பட 13 பேரை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் சுட்டு கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசு படை வீரர்கள் உட்பட 13 பேரை தாலிபான்கள் கொலை செய்துள்ளனர். தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.
இதனைதொடர்ந்து ஆப்கான் முழுவதும் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக பல அடக்குமுறைகளை தாலிபான்கள் கையாண்டு வருகின்றனர்.
இதனால் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் முந்தைய ஆட்சியில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக தாலிபான்கள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30ஆம் திகதி நுழைந்த தாலிபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் பணியாற்றிய அரசு படைவீரர்கள் 11 பேர் என மொத்தம் 13 பேரை கொலை செய்துள்ளனர்.
இதில் ஒரு 17 வயது சிறுமியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.