காபூல் விமான நிலையத்திற்கு வந்த தாலிபான் தலைவர் மக்களிடம் சொன்ன வார்த்தை! கமெராவில் பதிவான காட்சி
காபூல் விமானநிலையத்தில் கூடியிருக்கும் ஆப்கானிஸ்தான் மக்களிடம் தாலிபான் தலைவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய சில நாட்களிலே அங்கிருந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இன்னும் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூலில் இருக்கும் விமானநிலையத்தில் முகாமிட்டு காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் கூடியிருக்கும் மக்கள் முன்பு தாலிபான்களின் தலைவர் ஒருவர் பேசியுள்ளார்.
The #Taliban leader is urging #Afghans not to leave the country at #Kabul airport
— Journalist Siraj Noorani (@sirajnoorani) August 22, 2021
He said that #Afghanistan is the home of all of us, no one should leave the country in fear. #TalibanTerror #talibans @ChaudharyParvez Video pic.twitter.com/jXZTy9RMMo
அதில், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இது நம் அனைவரின் வீடு, யாரும் பயந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டாம், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.