ஹிஜாப் அணியாமல் சென்ற 21 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! கடத்தி சென்று தாலிபான்கள் செய்த பயங்கர செயல்
ஆப்கானிஸ்தானில் ஹிஜாப் அணியாமல் சென்ற பெண்ணை தாலிபான்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு இராணுவப் படைகள், வெளியேறி வருவதால், அந்நாட்டு மீது மற்றும் மக்கள் மீதும் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இந்திய பத்திரிக்கையாளர், டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். ஆனால், தாலிபான்கள் இது தவறாக நடந்தது என்று காரணம் கூறினார்.
அதுமட்டுமின்றி கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத்தும் கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஆப்கானிஸ்தானில் பால்க் மாவட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த நசானின் என்ற 21 வயது பெண் ஹிஜாப் அணியாமல் சென்றுள்ளார்.
இதைக் கண்ட தாலிபான்கள் அவரை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாலிபான்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.
ஆனால், தலிபான்களின் விதிமுறைகள்படி, பெண்கள் கல்வி கற்பது, ஹிஜாப் அணியாமல் இருப்பது குற்றம் என்பதால், நிச்சயமாக இதை அவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.