தாலிபான்கள் செய்த செயலால்...இந்தியாவுக்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து: எச்சரிக்கும் உளவுத்துறை
ஆப்கானிஸ்தானின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஐ.எஸ் ஆதரவாளர்கள் 25 பேரால் இந்தியாவுக்கு மிகப் பெரும் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இயங்கி வருகிறது. அதன் படி இந்த ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட கேராளாவைச் சேர்ந்த 25 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர்.
இவர்கள் கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.
அதன் பின் அங்கு கைது செய்யப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைவசம் வந்ததால், அங்கு சிறையில் இருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
அதில் இந்த 25 பேரும் அடங்குவதால், இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து உள்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்து கேரளாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளது. தேசிய விசாரணைக் குழுவின் பட்டியலில் உள்ள இவர்கள், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. தற்போது கடலோர மாவட்டங்கள், சர்வதேச எல்லைகள் உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.