ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்ததால் அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட கதி!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளதால் அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் உயிருக்கு அஞ்சி தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதே நிலை தான் ஆப்கான் மகளிர் கால்பந்து வீராங்கனைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் அணி 2010ல் உருவாக்கப்பட்டது. அந்த அணி சர்வதேச போட்டிகள் பெரிதாக பங்கேற்காவிட்டாலும் அருகாமை நாட்டு அணிகளுடன் விளையாடி வந்தது.
இந்த நிலையில் ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த நிலையில் மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தலைமறைவு வாழ்வை தொடங்கியுள்ளனர். முந்தைய தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் விளையாடுவது தடை செய்யப்பட்டதோடு மீறியவர்களுக்கு கொடூர தண்டனையும் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளதால் மகளிர் கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீராங்கனைகளின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.