ஆப்கானில் இளைஞனை சுட்டுக்கொன்று, சடலத்தை பொதுவெளியில் பார்வைக்கு வைத்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் அந்தராப் மாவட்டத்தில் இளைஞரை சுட்டுக் கொன்ற தாலிபான்கள், இறந்த உடலைப் பகிரங்கமாக மக்கள் பார்க்கும்படி வைத்துள்ளனர்.
பாக்லானின் அந்தராப் மாவட்டத்தில் ஒரு இளைஞனை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர், பின்னர், இந்த மாவட்டத்தின் கடைவீதியில் அவரது உடலைப் பகிரங்கமாகக் காட்டியுள்ளனர்.
தகவல்களின்படி, ஜூலை 20 அன்று அந்தராப் மாவட்டத்தில் காசா தாராஷ் பகுதியில் வசிக்கும் ஒருவரை அவரது வீட்டை விட்டு வற்புறுத்தி வெளியே வரவழைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின்படி, அப்பகுதி மக்கள் இளைஞரின் சடலத்தை மாவட்டத்தின் தலைநகருக்குக் கொண்டு வந்து, ஜூலை 21 வியாழன் அன்று தாலிபான்களிடம் விளக்கம் கேட்டனர்.
ஆனால், மாவட்ட கட்டிடத்தின் முன் திரண்டிருந்த மக்களை தாலிபான்கள் வான்வழியாக துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனெவே சிறார்கள் உட்பட இதுபோல் பலபேரை தாலிபான்கள் கொன்று வெட்டவெளியில் மக்கள் பார்வைக்கு வைத்து அச்சறுத்தியுள்ளனர்.
தாலிபான்களின் தன்னிச்சையான கொலைகள் தொடர்பான UNAMA-வின் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், ஒரு நாளுக்குப் பிறகு இந்த கொலை நடந்தது.
தாலிபான்கள் தங்கள் பொதுமன்னிப்பு ஆணைக்கு உறுதியளிக்கவில்லை என்றும் கடந்த 10 மாதங்களில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊழியர்களைக் கொன்றதாகவும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு (UNAMA) தெரிவித்துள்ளது.