பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தாலிபான்கள் கட்டுபாட்டில் ஆப்கான் வந்ததால் இந்தியாவுடான உறவு குறித்து எழுந்த அச்சம்! தாலிபான் தலைவர் கூறிய அதிரடி பதில்
இந்தியாவுடனான உறவை தொடர விரும்புவது குறித்து தாலிபான்கள் முக்கிய தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டேனக்சாய் பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்காக பல திட்டங்களை இந்தியா மேற்கொண்டது.
பாகிஸ்தானின் ஆதரவு பெற்றுள்ள தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதால், இரு தரப்பு உறவு எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து கட்டாரில் இருக்கும் தாலிபான் அமைப்பின் துணைத் தலைவர் ஸ்டேனக்சாய் பேசுகையில், ஆப்கனை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு.
கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பைபோலவே தொடர விரும்புகிறோம்.
புதிய அரசு அமைந்ததும் இந்தியாவுடனான உறவைத் தொடர்வது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.