காபூல் விமான நிலையத்தில் மரண வேதனைப்படும் மக்கள்; நிலைமையை விவரித்த பிரித்தானிய மாணவர்
பிரித்தானியாவின் "பாஸ்போர்ட்டை பார்த்த நொடியே சுட்டிருப்பேன்" என மருத்துவ மாணவர் ஒருவரை தாலிபான்கள் மிரட்டியுள்ளனர்.
காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது, தாலிபான் பயங்கரவாதிகள் 25 வயது மிக்க ஒரு பிரித்தானிய மருத்துவ மாணவரிடம் "உலக நாடுகள் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் உங்கள்களை சுட்டு கொன்று குவித்திருப்போம்" என்று கூறியுள்ளனர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவர் காபூல் விமான நிலையத்தில் தாலிபான்களால் மரண வேதனைப்படும் மக்களின் நிலைமை விவரித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தாலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற மக்களை பயமுறுத்தும் வகையில், கண்டபடி காற்றில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் அனைவரையும் மனிதர்கள் போல் அல்லாமல் ஆட்டு மந்தையைப் போல் நடத்துகின்றனர்.
அங்கிருக்கும் கூட்டத்தை நிர்வகிக்க முடியாத பயங்கரவாதிகள் - பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என அவர்கள் வழியில் யார் வந்தாலும் சாட்டையால் அடிப்பார்கள்.
தாலிபான்கள் கொஞ்சமும் மாறவில்லை என்று நான் நினைக்கிறேன், அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தாலிபான் போராளி ஒருவர், "நாங்கள் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தில் இல்லை என்றால் உனது பாஸ்போர்ட் காரணமாகவே நாங்கள் உன்னை சுட்டுக் கொன்றிருப்போம்" என அச்சுறுத்தியதாக மாணவர் கூறினார்.
கிட்டத்தட்ட விமான நிலைய வாசலிலேயே 24 மணிநேர காத்திருப்புக்கு பின், ஒரு வழியாக அந்த மாணவர் ஆப்கானை விட்டு வெளியேறியதாக கூறினார்.
மேலும் "ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கவுள்ள தாலிபான்கள் மக்கள் மீது 1% கூட கருணை காட்டுவார்கள் என்ற நம்பிக்கை 0% கூட எனக்கு இல்லை" என அவர் கூறினார்.
