ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த பயங்கரம்! தொடரும் தலிபான்கள் வெறியாட்டம்: கொடூரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் காவலில் வைத்து சித்தரவதை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனுபவித்த கொடூரத்தை வெளிப்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், தங்கள் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க கோரி நாட்டின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவரை நிறுத்த வேண்டும் என காபூலில் ஆப்கானியர்கள் குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காபூலில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலிபான் போராளி தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று பெண்கள் போராட்டம் குறித்து செய்தி சேகரித்த Etilaatroz நியூஸ் பத்திரிக்கையாளர்கள் Nemat Naqdi, Taqi Daryabi ஆகியோரை சிறைபிடித்த தலிபான் போராளிகள், இருவரையும் காவலில் வைத்து சரமாரியாக தாக்கி சித்தரவரை செய்தள்ளனர்.
தலிபான்கள் சித்தரவதை செய்ததில் Nemat Naqdi, Taqi Daryabi இருவரும் உடம்பிலும் பின்புறத்தில் ஏற்பட்ட காயங்களை வெளிப்படுத்தும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Painful. Afghan journalists from @Etilaatroz, Nemat Naqdi & Taqi Daryabi, display wounds sustained from Taliban torture & beating while in custody after they were arrested for reporting on a women’s rally in #Kabul, #Afghanistan.#JournalismIsNotACrime https://t.co/jt631nRB69 pic.twitter.com/CcIuCy6GVw
— Marcus Yam 文火 (@yamphoto) September 8, 2021
இருவரின் உடம்பிலும் பட்டை பட்டையாக வரிசையாக ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதை புகைப்படம் தெளிவாக காட்டுகிறது.
பத்திரிக்கையாளர்கள் மீது தலிபான்கள் நடத்தியுள்ள கொடூர தாக்குதலை பலர் கண்டித்து வருகின்றனர்.