காபூலில் உள்ள நார்வே தூதரகத்தை கைப்பற்றிய தாலிபான்கள் அங்கு செய்த மோசமான செயல்! வெளியான புகைப்படங்கள்
காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு அராஜக செயலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமையப் பெற்று பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தாலிபான்கள் பொதுவாக பழமைவாதத்தை பின்பற்றக்கூடியவர்கள். அந்த அடிப்படையில் பெண்கள், குழந்தைகள் கல்வி கற்கத்தடை, மது அருந்தத் தடை,பெண்கள் வேலைக்கு செல்லத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகளை அவர்கள் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், காபூலில் உள்ள நார்வே நாட்டின் தூதரகத்தை தாலிபான்கள் நேற்று கைப்பற்றினர். அப்போது முதல்கட்டமாக, அங்குள்ள ஒயின் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் புத்தகங்கள் ஆகியவற்றை அழிக்க உத்தரவிட்டனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய போதே, நார்வே தூதரக அதிகாரிகள் தாயகம் திரும்பிவிட்டனர். தற்போது ஒரு சில அலுவலர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரான் நாட்டுக்கான நார்வே தூதர் சிஹ்வல்ட் ஹேக்கூறுகையில், காபூலில் உள்ள நார்வே தூதரகம் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஒரு சிலதினங்களில் தூதரகத்தை ஒப்ப டைத்து விடுவதாக அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையில் தாலிபான்கள் குழந்தைகளின் புத்தகங்களை கிழிக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.