மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் குறித்து மெளனம் காக்கும் தாலிபான்கள்! மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பில் முக்கிய உத்தரவு
ஆப்கானிஸ்தானில் மாணவர்கள் மற்றும், ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான் பயங்கரவாதிகள் அங்கு புதிய ஆட்சியை அமைத்துள்ளனர்.
தாலிபான் அரசின் கல்வித் துறை அமைச்சகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குத் திரும்புமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்தோ, வயது கட்டுப்பாடு குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியை தலிபான்கள் மறுக்க வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது.
முன்னதாக, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வர தாலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.