ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இந்தியா தொடர்பில் தாலிபான்கள் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த இறக்குமதி, ஏற்றுமதிகளை தாலிபான்கள் திடீரென நிறுத்தி கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்தே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சஹாய் கூறுகையில், பாகிஸ்தான் வழியே மேற்கொள்ளப்பட்ட சரக்கு போக்குவரத்தை தாலிபான்கள் நிறுத்தியுள்ளனர்.
இதன்மூலம், இந்தியாவிலிருந்து சென்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவருவதை தவீரமாக கண்காணித்து வருகிறோம்.
அங்கிருந்து வரும் இறக்குமதிகள் பாகிஸ்தான் வழியே வந்தன. ஆனால், தற்போது பாகிஸ்தான் வழியே கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் நல்ல உறவை பேணிவருகிறோம்.
ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் முதலீடு செய்துள்ளோம். கிட்டத்தட்ட 400 வளர்ச்சி பணி திட்டங்களை மேற்கொண்டுள்ளோம் என கூறியுள்ளார்.