பெண்களுக்கு இரக்கமின்றி சவுக்கடி கொடுக்கும் தாலிபான்கள்! காரணம் இதுதான்... மனதை கலங்கடிக்கும் வீடியோ காட்சி
ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சிக்கு எதிராக போராடிய பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டுள்ளார்கள்.
தாலிபான் ஆட்சிக்கு எதிராக பல இடங்களில் பெண்கள் போராடி வருகின்றனர். காபூல் தெருக்களில் போராடியபோது அவர்கள் தாக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக போராடிய பெண் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவர் கூறுகையில், அவர்கள் எங்களை சவுக்கால் அடித்தார்கள். எங்களை வீடுகளுக்குச் சென்று விடுமாறும், அரசை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறார்கள்.
எங்களை எதிலும் சேர்க்காத போது, எந்த வித உரிமையும் அளிக்கப்படாத போது, நாங்கள் ஏன் இந்த இந்த அரசனை ஏற்க வேண்டும் என துணிச்சலுடன் பேசியுள்ளார்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை தாலிபான்கள் சாலையில் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.