தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல்

russia daughter father ukraine phone conversation
By Raju Feb 25, 2022 06:00 AM GMT
Report

உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றி அழைத்து செல்லுமாறு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சிக்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமான மாணவ-மாணவிகள் உக்ரைன் சென்று உள்ளனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி மவுனி சுகிதா (20). இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

மவுனி தொலைபேசியில் பேசுகையில், உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்தியா திரும்ப திட்டமிட்டேன். என்னுடன் தமிழ் மாணவ-மாணவிகள் சுமார் 50 பேரும், இந்திய அளவில் மாணவ-மாணவிகள் 1000 பேரும் இருக்கிறார்கள்.

நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் முன்பதிவு செய்தோம். ஆனால் விமானங்கள் ரத்து ஆனதால், நாங்கள் பயணச்சீட்டு வாங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. உக்ரைனில் 3 எல்லைகளையும் ராணுவம் அடைத்து விட்டது. நாங்கள் லிவ்விவ் நகரில் இருக்கிறோம்.

தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல் | Tamil Girl From Ukraine Cries Speaks To Father

இங்கிருந்து போலந்து நாடு மிக அருகில் உள்ளது. கார் அல்லது பஸ்சில் கூட சென்று விட முடியும். ஆனால், இங்கு போர் அறிவிப்பு காரணமாக வாடகை கார்கள், பஸ் வசதி, விமான வசதி என்று எதுவும் இல்லை. இதனால் என்ன செய்வது, யாரை தொடர்பு கொண்டு உதவி கேட்பது என்றே தெரியவில்லை.

ஏன் என்றால், இந்திய தூதரகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. முன்கூட்டியே நாங்கள் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கியபோது கூட முதலில் இந்திய தூதரகத்தைதான் தொடர்பு கொண்டோம். எப்படியாவது தூதரக அதிகாரிகள், இந்திய மாணவ-மாணவிகள் சொந்த நாட்டுக்கு வந்துவிட உதவி செய்வார்கள் என்று நம்பினோம். ஆனால், எங்கள் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் எடுக்கவே இல்லை.

இப்போது எங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால், உக்ரைன் டாலரில் அதை தர மறுக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லலாம் என்று சென்றோம். அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது சுமார் 30 பேர் பணம் எடுத்த நிலையில் ஏ.டி.எம். மையத்தையும் மூடி விட்டார்கள். எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உணவை சேமித்துக்கொள்ளலாம் என்று கடைகளுக்கு சென்றோம்.

தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல் | Tamil Girl From Ukraine Cries Speaks To Father

ஆனால், அங்கும் எதுவும் இல்லை. எதுவும் இல்லை என்றால் அனைத்தையும் மக்கள் வாங்கி விட்டதால் கடைகளே காலியாக உள்ளன. எங்களுக்கு கிடைத்த சில உணவுகளை சேகரித்து வைத்து இருக்கிறோம். இதை வைத்து எங்களால் ஒரு வார காலம் சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம். என்ன செய்வது என்று தெரியவில்லை.

நேற்று காலையில் கூட விமானங்கள் பறப்பதை பார்த்தோம். அதற்குள் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு போர் தொடங்கி விட்டார்கள், எங்களை எப்படியாவது மீட்டு செல்லுங்கள் என கூறினார்.

இதனிடையில் மவுனியுடன் அவர் தந்தை நாகராஜன் பேசிய தொலைபேசி உரையாடல் மனதை கலங்கடிப்பதாக உருக்கமாக இருந்தது. நாகராஜன் பேசுகையில், தைரியமா இரும்மா! அமைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். போலந்து வழியாக வந்திரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதுவரை பாதுகாப்பாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என நாகராஜன் பேசியதும், அவரது மகள் மவுனி கண்ணீருடன் சரிப்பா பார்த்துக்கிறேன் என்று கண் கலங்கினார்.


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US