சீனாவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மரணம்: உடலைக் கொண்டுவர போராடும் குடும்பத்தினர்
சீனாவில் மருத்துவம் பயின்று வந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதால், பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், அவரது உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மாணவர் அப்துல் ஷேக் தனது மருத்துவக் கல்வியின் முடிவில் சீனாவில் இன்டர்ன்ஷிப் செய்து வந்தார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், டிசம்பர் 11-ஆம் திகதி சீனாவுக்கு திரும்பினார்.
சீனாவிற்கு எட்டு நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, ஷேக் வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.
மாணவர் அப்துல் ஷேக்கின் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் உதவி கேட்டுள்ளனர். மேலும் தமிழக அரசு உதவி செய்யுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.