வெளிநாட்டு பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட தமிழர்! வெளியான புகைப்படம்
வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை தமிழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு அவருடன் வியட்நாம் நாட்டை சேர்ந்த இன்கோ டியு தாவோ என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்தார்.
அப்போது பிரபாகரனுக்கும், இன்கோவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இந்நிலையில் இன்கோ டியு தாவோவை பிரபாகரன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் புதுமணதம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.