வியட்நாமில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு - தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு
வியட்நாம் படகு விபத்தில் தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாம் படகு விபத்து
வியட்நாமின் ஃபு குவோக் கடற்பகுதியில் ஹான் மே ருட்டிலிருந்து ஆன் தோய் துறைமுகத்திற்கு 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 4 பணியாளர்கள் உடன் ஓஷன் பேர்ல் ஐலேண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான வேகப்படகு ஒன்று புறப்பட்டது.

ஹான் மே ரட் ங்கோய் தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில், அந்த படகு எதிர்பாராதவிதமாகப் பழுதடைந்து கவிழ்ந்ததில், அதில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர்.
இதனை கண்ட அந்த பகுதியில் இருந்து மற்ற சுற்றுலா படகுகளும் அவர்களை மீட்க உதவியது. கடற்படை, கடலோரக் காவல்படை ஒருங்கிணைந்து, மீட்பு நடவடிக்கையில் பங்கேற்பதற்காக 35 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் 2 கப்பல்களை அனுப்பப்பட்டது.
🇻🇳 In Vietnam, 15 people died when a boat capsized near Phu Quoc Island, VTC News reported, citing police.
— Маrina Wolf (@volkova_ma57183) July 11, 2026
According to law enforcement, the vessel was carrying tourists; there were 36 people on board, including four crew members. pic.twitter.com/JZaRz0wPr2
ஆன் தோய் துறைமுக எல்லைக் காவல் நிலையத்தின் அறிக்கையின்படி, 2 பெண்கள் மற்றும் 13 ஆண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகில் பயணித்த 32 பேரின் பெயர் பட்டியலையும், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்த பலரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பழனியை சேர்ந்த முருகபிரபு உயிரிழந்துள்ளார். சிறப்பாக பணியாற்றியதற்காக லாவா மொபைல் நிறுவனம் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.
As per information received from official sources, the following 32 Indian tourists were onboard the boat which capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago.
— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026
We are ascertaining further details of casualties and would update soon.@cghcm pic.twitter.com/geddttdpWB
அந்த வேகப் படகு அசாதாரணமான அலைகளையும் காற்றையும் எதிர்கொண்டதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வியட்நாமிலுள்ள இந்திய தூதரகம், "ஒரு துயரச் சம்பவமாக, சில மணி நேரங்களுக்கு முன்பு வியட்நாமின் ஃபு குவோக் தீவுக்கு அருகே பல இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்த துல்லியமான விவரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. முதல் கட்டுப்பாட்டு அறையை 84362817930, 84915523714 மற்றும் 84334520414, 84913089165 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago.
— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026
Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing.
In order to provide information…
தகவல் மற்றும் உதவியை வழங்குவதற்காக, ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திலும், ஹனோயில் உள்ள தூதரகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெளிவான நீல நிற நீர் மற்றும் வெண்மணலுக்காகப் புகழ்பெற்ற மே ரட் தீவை அடைய பொதுவாக சுமார் 20-40 நிமிடங்கள் படகு அல்லது வேகப்படகில் பார்வையாளர்கள் பயணிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |