மைனஸ் 54 செல்சியஸ் குளிரில் 500 நாட்கள் ஆய்வு - ஆர்க்டிக் நோக்கி நாயுடன் புறப்பட்ட தாரா குழு
ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் புறப்பட்டுள்ளனர்.
ஆர்க்டிக் பகுதியில் ஆய்வு
நிலா, செவ்வாய் என பூமியை தாண்டி விண்வெளியில் உள்ள கிரகங்களை மனிதர்கள் ஆய்வு செய்து வந்தாலும், இன்னும் பூமியில் அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகள் நிறைய உள்ளன.

அப்படி பூமியில் உள்ள அதிகம் ஆய்வு செய்யப்படாத பகுதிகளில், −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலை நிலவும் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியும் ஒன்று.
6 விஞ்ஞானிகள் உட்பட 12 பேர் அடங்கிய குழு தாரா துருவ நிலையம் மூலம் பிரான்ஸின் லோரியன் துறைமுகத்திலிருந்து ஆர்க்டிக் பெருங்கடல் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

நேற்று பிரான்ஸ் கடல்சார் அமைச்சர் கேத்தரின் ஷபாட் முன்னிலையில், இந்தப் புறப்பாட்டைக் காண்பதற்காகப் பல நூறு மக்கள் துறைமுகத் தளங்களில் திரண்டிருந்தனர்.
Sciences – Mer |
— Préfet du Morbihan🇫🇷🇪🇺 (@Prefet56) July 19, 2026
Départ de Tara Polar Station Lorient – Le 19 juillet 2026
Catherine Chabaud, ministre de la Mer, était aujourd’hui, le 19 juillet, à Lorient à l’occasion du départ de la Tara Polar Station.
Guidée par Romain Troublé, directeur général de la fondation Tara… pic.twitter.com/JUWkRyUMm6
ஆர்க்டிக் பிராந்தியம் பூமியின் மற்ற பகுதிகளை விட 3 முதல் 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது.
ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதுள்ளது.
தாரா துருவ நிலையம்
தாரா துருவ நிலையம் என்பது −52 °C வரையிலான குறைந்த வெப்பநிலையையும், விரிவடைந்து வரும் ஆர்க்டிக் கடல் பனியின் பெரும் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மிதவை ஆகும்.
இது 285 அடி நீளமும் , 52 அடி அகலமும் கொண்டது. குளிர்காலத்தில் 12 பேரும், கோடையில் 20 பேரும் இதில் தங்கலாம். உள்ளே 400 சதுர மீட்டர் பரப்பளவுள்ள வசிப்பிடம் உள்ளதோடு, மருத்துவ அறை, சமையலறை ஆகியவை உள்ளன.

இந்த நிலையத்தில் சூரிய மின் தகடுகள், காற்றாலை மற்றும் பயோடீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தாரா துருவ நிலையம் ஒரு பனி உடைக்கும் கப்பலின் பாதுகாப்புடன் ஆர்க்டிக் பெருங்கடலின் ரஷ்ய/நார்வே பக்கத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
அதன் பின்னர் தன்னை பனிக்கட்டிகளுக்குள் உறைந்து போக அனுமதித்து, கிரீன்லாந்துக்கும் ஸ்வால்பார்டுக்கும் இடையில் உள்ள ஃபிராம் நீரிணையை நோக்கி, வட துருவத்தைக் கடந்து, ஒரு நாளைக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில், 350 முதல் 500 நாட்கள் வரை தொடர்ந்து மிதக்கும்.

அது 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு சென்றடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் செல்லும் 12 பேர் அடங்கிய குழுவிற்கு கடுமையான பனியை தாங்கும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நெருங்கி வரும் துருவ கரடி உள்ளிட்ட விலங்குகளைக் கண்டறிவதற்காக, ஒரு லப்போனிய மேய்ப்பு நாயும் இந்தப் பயணத்தில் அவர்களுடன் செல்கிறது.
மேலும், குழுவில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பிற்காக துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தின் மையத்தில் பனிக்கட்டிக்குக் கீழே உள்ள கடலுக்கு நேரடியாகத் திறக்கும் ஒரு பிரத்யேகமான 1.6 மீ விட்டம் கொண்ட செங்குத்துத் துளை உள்ளது.

விஞ்ஞானிகள் இந்தத் துளையின் வழியாக, கடுமையான குளிர்காலத்திலும்கூட 6,560 அடி ஆழம் வரை செல்லக்கூடியவை.கருவிகளை கடலுக்குள் இறக்கி, 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரிக்க உள்ளனர்.
பங்களிக்கும் நாடுகள்
அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, சுவிட்சர்லாந்து ஸ்பெயின், மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கின்றன.
தாரா பெருங்கடல் அறக்கட்டளை மற்றும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் (CNRS) போன்ற நிறுவனங்கள் நிதி, கட்டுமானம் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கியுள்ளது.
இந்த பயணத்திற்கு 6 மில்லியன் யூரோ செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 முதல் 2045 ஆம் ஆண்டுக்கு இடையில், 2 ஆண்டுகளுக்கு ஒரு பயணம் என்ற விகிதத்தில் திட்டமிடப்பட்ட 10 பயணங்கள் அடங்கிய ஒரு திட்டத்தின் முதல் பயணம் இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |