ட்ரம்பின் வரி விதிப்பால்... மில்லியன் கணக்கான மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
எதிர்பாராத நெருக்கடி
கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட் காலகட்டத்தின் துவக்கத்தில் மக்கள் அவசர அவசரமாக பொருட்களை மொத்தமாக வாங்கிக் குவித்த அதே நிலை தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கனேடிய சாஃப்ட்வுட் மரத்தின் மீது கிட்டத்தட்ட இருமடங்கான வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் பற்றாக்குறைக்கு தள்ளப்படும் மிக மோசமான சூழலை உருவாக்கும் என்றே அஞ்சப்படுகிறது.
ஏப்ரல் 2-ம் திகதி முதல் சாஃப்ட்வுட் மரத்தின் மீதான வரியை 27 சதவீதமாக உயர்த்த ட்ரம்ப் உறுதி கொண்டுள்ளார். ஆனால் இது 50 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் இந்த முடிவால் டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் துண்டுகளை தயாரிக்க பயன்படும் NBSK என்ற மூலப்பொருளின் பற்றாக்குறை ஏற்படும். கடந்த ஆண்டு மட்டும் 2 மில்லியன் டன் கனேடிய NBSK-வை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
நிறுவனங்கள் மூடப்படும்
கடந்த 30 ஆண்டுகளாக NBSK இறக்குமதிக்கு கனடாவையே அமெரிக்கா நம்பியுள்ளது. தற்போது கனடாவில் இருந்து NBSK ஏற்றுமதிக்கு வாய்ப்பில்லை என்றால், அமெரிக்க நிறுவனங்கள் பல நெருக்கடியை எதிர்கொள்ளும்.
இதனால், ட்ரம்பின் வரி 50 சதவீதத்தை தாண்டினால், பல அமெரிக்க நிறுவனங்கள் மூடப்படும் சூழல் உருவாகும் என்றே கூறப்படுகிறது. நீண்ட காலமாக உற்பத்தியை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு கருவியாகவே ட்ரம்ப் வரிகளை ஊக்குவித்து வருகிறார்.
இதனாலையே கனடாவின் சாஃப்ட்வுட் தங்களுக்கு தேவையில்லை என ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |