கடலில் சிக்கிய தாய், உடன்பிறப்புகள்., உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 13 வயது சிறுவன்
கடலில் சிக்கிய தனது குடும்பத்தைக் காப்பாற்ற, 13 வயது சிறுவன் தனது உயிரை பணயம் வைத்து செய்த செயல் நெகிழ வைக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த ஆஸ்டின் அப்பெல்பீ என்ற 13 வயது சிறுவன், தனது தாயார் மற்றும் தம்பி, தங்கையை காப்பாற்றிய வீரம் மிகுந்த செயலுக்காக உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறார்.
இந்த சம்பவம் ஜனவரி 30 அன்று குயின்டலப் பகுதியில் நடந்தது.
குடும்பமாக விடுமுறையைக் கொண்டாட, kayak மற்றும் paddleboard பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தபோது, கடலில் ஏற்பட்ட வலுவான காற்று மற்றும் பெரிய அலைககளால் அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

ஆஸ்டின், முதலில் தனது கயாக்கை கரை நோக்கி இயக்க முயன்றார். ஆனால் கடுமையான அலைகள் அதை கவிழ்த்துவிட்டன. பின்னர், அவர் நான்கு மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார்.
ஆரம்பத்தில் 2 மணி நேரம் life jacket அணிந்து நீந்தியுள்ளார். ஆனால் அது வேகத்தை குறைத்ததால், அதை கழற்றி, மீதமுள்ள இரண்டு மணி நேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தியுள்ளார்.
கரையை அடைந்ததும், அவர் சோர்வால் விழுந்துவிட்டார். இருந்தாலும், மேலும் 2 கிலோமீட்டர் ஓடி, ஒரு தொலைபேசி கிடைத்த இடத்தில் உதவி கோரினார்.
அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சுமார் இரவு 8.30 மணிக்கு, அவரது தாய் மற்றும் இரு சகோதரர்கள் 14 கிலோமீட்டர் கடலுக்குள் ஒரு paddleboard-ல் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
அனைவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

“ஆஸ்டினின் காட்டிய துணிச்சலும், உறுதியும் அவரது குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியது” என அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவம், ஒரு சிறுவனின் அசாதாரண தைரியம் மற்றும் மனவலிமையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |