உயிரை பயணம் வைத்து கடலில் நீந்தி ஐரோப்பாவிற்குள் நுழையும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்! நெஞ்சை உருக்கும் வீடியோ
வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவிலிருந்து நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் உயிரை பணயம் வைத்து கடலில் நீந்தி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குள் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாரம் மட்டும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் மொராக்கோவிலிருந்து கடலில் நீந்திய படி ஸ்பெயினுக்குள் நுழைந்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொராக்கோவிலிருந்து கடலில் நீந்த தொடங்கும் புலம் பெயர்ந்தோர் ஸ்பெயினின் Ceuta நகரில் கரையேறுகின்றனர்.
புலம்பெயர்ந்தோரை கண்காணிக்க ஸ்பெயின் Ceuta நகரில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இளைஞர்களே கடலில் நீந்திய படி ஸ்பெயினுக்குள் நுழைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
A migrant boy desperately uses plastic bottles to stay afloat.
— Sky News (@SkyNews) May 20, 2021
The boy, a migrant attempting to reach the Spanish enclave Ceuta, tied plastic bottles to himself.
Read more here: https://t.co/F99pQ63xjr pic.twitter.com/Rm1mNXvgAj
Ceuta கடற்கரையில் ஸ்பெயின் எல்லை பாதுகாப்பு படையினரால் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் கிடங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிடிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்களை தொடர்பு கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீந்தி வரும் பல புலம்பெயர்ந்த இளைஞர்கள் பாதுகாப்பு படையினரிடம் பிடிப்படாமல் ஸ்பெயினுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பிடிப்படும் புலம் பெயர்ந்த இளைஞர்களை ஸ்பெயின் மீண்டும் மொராக்கோவிற்கு திருப்பி அனுப்பி வருகிறது.
அதேசமயம் ஸ்பெயின் பாதுகாப்பு படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிடிப்பட்ட பல புலம்பெயர்ந்தோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
புலம் பெயர்ந்தோர் கடல் மூலம் ஸ்பெயினுக்குள் நுழையாத படி நடவடிக்கை முன்னெடுக்குமாறு ஸ்பெயின் அரசு மொராக்கோவிடம் விலியுறுத்தியுள்ளது.