ஈரானிடம் 200 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான புளூட்டோனியம் கையிருப்பு
தொடர்ந்து நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் இடையே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கட்டுப்பாட்டுத் தளங்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியுள்ளது.
கடுமையான தாக்குதல்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய அமைதி ஒப்பந்தங்கள் குறித்த பதிலுக்காக ஜனாதிபதி ட்ரம்ப் இன்னும் காத்திருக்கும் நிலையில், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்த இருப்பதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை சனிக்கிழமை இரவு எச்சரித்துள்ளது.

ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீதான எந்தவொரு தாக்குதலும், அப்பகுதியில் உள்ள அமெரிக்க மையங்களில் ஒன்று மற்றும் எதிரிக் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதலுக்கு வழிவகுக்கும் என மிரட்டல் விடுத்துள்ளது.
ஓமான் வளைகுடாவில் இரண்டு ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா தாக்கிய ஒரு நாள் கழித்து, ஈரான் இந்த புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளும் மாறி மாறிப் பேசி வருகின்றன. இந்த முரண்பாடு ஈரானின் அணுசக்தித் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பினர், ஆனால் நிபுணர்கள் ஈரானின் மிகப்பெரிய புளூட்டோனியம் இருப்பை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அணு ஆயுத நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில், ஈரானின் புளூட்டோனியம் கையிருப்பில் 200-க்கும் மேற்பட்ட அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான மூலப்பொருள் உள்ளது என தெரிய வந்துள்ளது.

எந்தவொரு ஒப்பந்தமும்
இந்த நிலையில், ஈரான் அணுசக்திக்கு எதிரான ஐக்கிய அமைப்பின் கொள்கை இயக்குனர் ஜேசன் பிராட்ஸ்கி, ஃபாக்ஸ் டிஜிட்டலிடம், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா புளூட்டோனியம் தொடர்பில் உள்ளடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் கடந்த ஜூன் 2025 மற்றும் மார்ச் 2026 ஆகிய இரு முறை, அராக் கனநீர் அணு உலையின் மீது தாக்குதல் நடத்தியது. குண்டுவீச்சுக்குப் பிறகும் ஈரான் அந்த ஆலையை தொடர்ச்சியாக புனரமைக்க முயன்றதாக உளவுத்துறை தெரிவித்தது, எனவே ஈரானுடனான எந்தவொரு ஒப்பந்தமும் புளூட்டோனியம் தொடர்பில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரான் ஆயுதங்களைக் கையகப்படுத்தும் திறனை முற்றிலுமாக முடக்கும் நோக்கில், அமெரிக்கா வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் பத்து முன்னணி ஆயுத விநியோகஸ்தர்கள் மீது தடைகளை விதித்தது.

இந்த நிலையில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் வெள்ளை மாளிகை இருப்பதாகவும், அன்றைய மாலையில் அவர்களிடமிருந்து ஒரு பதிலை எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |