பிரித்தானியாவில் வாக்களிக்க சென்ற போது அடித்து அவமானப்படுத்தப்பட்ட ஈரானியர்கள்! கடும் கோபத்தில் ஈரான்
பிரித்தானியாவில் வாக்களிக்க சென்ற ஈரானியர்களை அவமானப்படுத்தியதற்காக ஈரானுக்கான பிரித்தானியா தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 18ம் திகதி ஈரான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஈரானியர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வசதியாக பிரித்தானியாவின் 7 நகரங்களில் 11 மையங்களில் 12 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டது.
இன்று ஜூன் 19ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் வெற்றிக்கு தேவையான வாக்குகளை பெற்ற ரைசி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் வாக்களித்த ஈரானியர்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதற்காக இன்று ஈரானுக்கான பிரித்தானியா தூதருக்கு ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அளித்துள்ளது.
பிரித்தானியாவில் நடந்த வாக்குப்பதிவை சீர்குலைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வாக்குப்பதிவு மையங்களில் பல ஈரானியர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்குலுக்குள்ளானதாக ஈரான் தெரிவித்துள்ளது.