வெப்பத்தால் ஆண்டொன்றிற்கு பல்லாயிரக்கணக்கானோர் பலி: தடுக்க ஜேர்மனி திட்டம்
ஜேர்மனியில் வெப்பம் காரணமாக ஆண்டொன்றிற்கு பல்லாயிரக்கணக்கானோர் பலியாகும் நிலையில், இந்த ஆண்டு வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திட்டம் ஒன்றைத் தீட்டி வருவதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெப்பத்தால் ஆண்டொன்றிற்கு பலியாகும் பல்லாயிரக்கணக்கானோர்
ஜேர்மனியில், வெப்பத்தால் ஆண்டொன்றிற்கு 5,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ள ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்.
நாம் இந்த மரணங்களைத் தடுக்க ஏதாவது செய்தாகவேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லையென்றால் தொடர்ந்து ஆண்டுதோறும் உயிர்களை இழக்க நேரிடும் என்கிறார்.
புதிய திட்டம்
வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக திட்டம் ஒன்றைத் தீட்ட இருப்பதாக தெரிவித்துள்ள Karl Lauterbach, அதை இந்த ஆண்டே அமுல்படுத்த முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
என்ன திட்டம்?
அதாவது, பிரான்சைப் பின்பற்றி, நாட்டின் எந்தெந்த பகுதியில் எந்த அளவுக்கு வெப்பம் உள்ளதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வயதானவர்கள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெயிலின் பாதிப்பு மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது தொடர்பான செய்திகளை அனுப்புதல், குளிர்ச்சியான அறைகள் மற்றும் இலவச குடிநீர் மையங்க்ள் அமைத்தல்,
வல்லுநர்களை ஆலோசித்து நாடு முழுமைக்குமான திட்டம் ஒன்றைத் தீட்டுதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு, முனிசிபாலிட்டிகளே இந்த பொறுப்பை எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை அதை சரியாக நிறைவேற்றாததால், இம்முறை பெடரல் அரசு திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |